Tuesday, March 16, 2010

மாயா(அ)வதி

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வரான மாயாவதி ஒரு இரும்புப் பாவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருக்கு சமீப காலமாக என்ன ஆனது? கோடிகளை இறைத்து தனக்கு தானே சிலைகள் வைத்துக் கொள்வதும், அதற்காக நீதிமன்றத்தில் குட்டுப்படுவதும், எதிர்க்கட்சிகளின் வாய்க்கு சூப்பர் அவலாகவும் மெல்லப்படுகிறார். ஆனாலும் அவரின் ஆடம்பர போக்கு எதுவும் குறைவதாக இல்லை. கோடிக்கணக்கில் செய்யப்பட்ட ஒரு பண மாலையை சமீபத்தில் அணிந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு பலத்த சர்ச்சையில் சிக்கி கொண்டுவிட்டார். நமது தேசத்தை ஆளத் துடிக்கும் இந்த தலித் பெண்மணிக்கு, சினிமா தனமான வரலாற்று பிழைகள் வரிசையில் நிற்பது வேதனை. அதிகாரத்தை ஆடம்பரமாக மாற்றிக் கொண்டவர்கள் நாளடைவில் காணாமல் போயிருக்கிறார்கள். அதை தலித் மாயா வெல்வாரா? காத்திருப்போம்.
-சின்னப் பையன்

1 comment: