மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்படியோ நிறைவேற்ற போகிறார்கள், வாழ்த்துக்கள். ஆனால் இந்தியா போன்ற பிற்போக்கு தனமான மக்கள் வாழும் நாட்டில், பெண்கள் என்ன தான் பெரிய அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களை பின்னால் இருந்து ஆட்டிவிக்க போகிறவர்கள் ஆண்கள் தான். தற்போது பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளில் இருக்கும் பெண்களின் உண்மை அதிகாரம் அவர்களின் கணவன்மார்களிடம் தான் சிக்கி கிடக்கிறது. நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கூட இதற்கு விதி விலக்கல்ல (ஆனால் இதில் சோனியாவிற்கு விதிவிலக்கு தருகிறேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. முடிந்தால் யூகித்து கொள்ளுங்கள்). ஆக வராது வந்த மாமணியாக வரப் போகும் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையிலேயே பெண்களுக்கு அதிகாரத்தை தரும் வகையில் நடைமுறைக்கு வந்தால் அது தான் அவர்களுக்கு பெரிய வெற்றி.
ஆனால் சென்னையில் மெட்ரோ பேருந்துகளில் பயணிக்கும் போது மகளிர் இருக்கைகளை பயன்படுத்தும் எந்த வயது ஆண்களையும் துச்சமாக மதித்து, ஈவு இரக்கம் இல்லாமல் அவர்களை எழுப்பி விட்டு அந்த ஊர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் மகா கொடுமை. இதை பார்க்கும் போது தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா என எனக்கே எண்ணத் தோன்றுகிறது.
-சின்னப் பையன்

No comments:
Post a Comment