Saturday, March 20, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை...

விழுப்புரத்தை சேர்ந்த வாசு புதிய முறையில் தனது திருமணத்தை சமீபத்தில் நடத்தியிருக்கிறார். அவருக்கு தற்போது ஆறு குழந்தைகள். ஆனால் அனைத்தும் அவரின் திருமணத்திற்கு முன்பே பிறந்தவையாம். அதிலும் இரு பெண்களுடன் திருமணம் செய்யாமலே இத்தனை காலம் குடும்பம் நடத்தியிருக்கிறார். அவர்கள் இருவரும் அக்காளும் தங்கையுமாம். சபாஷ். இருவரையும் மனதார காதலிப்பதாக கூறும் இவர், இத்தனை ஆண்டுகாலமாகவும் செய்து கொண்டிருந்தது காதலா அல்லது கள்ளகாதலா என்பதை அவர் தான் விளக்க வேண்டும். தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி மாமன் சீர் வாங்க முனைந்த இவருக்கு, தனது திருமணத்தை நடத்திக் கொள்வதில் அத்தனை நாட்டமில்லையாம். ஆனாலும் பலரின் கட்டாயத்தின் பேரில் போனால் போகுது என்று, தற்போது தான் தனது காதலிகள் இருவரையும் முறைப்படி தாலி கட்டி மனைவிகள் ஆக்கி இருக்கிறார், இந்த புதுச் சட்டை போட்ட பழைய மாப்பிள்ளை.. அட ராமா! திருமணத்தில் எத்தனையோ வகைகள் இருக்க, இது எந்த வகை என்பதை விபரம் அறிந்தவர்கள் விளக்கட்டும்.
-சின்னப் பையன்

1 comment: