Sunday, February 28, 2010

அரசின் கஜானா நிரப்பும் பட்ஜெட்


நிதி அமைச்சர் பிரணாப் தாக்கல் செய்த பட்ஜெட் முற்றிலும் அரசின் கஜானாவை நிரப்புவதில் குறி வைத்திருக்கிறது. நிதி பற்றாக்குறை அதிகரித்திருக்கும் சூழலில் அவரின் இந்த முடிவு தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே விலைவாசி விண்ணில் பறக்கிறது. அதை இழுத்து கீழே கொண்டு வர இந்த பட்ஜெட் சிறிதும் முயற்சிக்கவில்லை என்பது காங்கிரஸ் மீதான மக்களின் கோபத்தை இன்னும் கிளறிவிடும். ஆனாலும் வருமான வரி உச்ச வரம்பை ரூபாய் பத்தாயிரம் ஆயிரம் உயர்த்தி மக்களுக்கு தேன்தடவும் வேலைகளை செய்யவும் பிரணாப் தவறவில்லை. நாடு கடனாளி ஆகிவிடக்கூடாது என்ற பயத்தால் அவரின் புதிய வரி கூட்டல்கள், நமது மக்களை கடனாளி ஆக்கும் என்பது திண்ணம்.அதுவே இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம்.

-சின்ன பையன்

No comments:

Post a Comment