Sunday, February 14, 2010

ஏன் இப்படி சோப் போடுறீங்க .....?

நமது துணை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று வந்தார். இது ஒரு அரசு முறை பயணம் சார்ந்த சாதாரண நிகழ்வு. ஆனால் அவர் டெல்லி செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும், இரு விமான நிலையங்களிலும் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுத்தார்கள். இதுவும் மகிழ்ச்சி தான். ஆனால் அவர் திரும்ப சென்னைக்கு திரும்பும் போது ஏன் அதே போன்ற ஒரு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது? அவர் டெல்லிக்கு சென்று வருவதை கூட ஒரு பெரும் சாதனையாக கருதுகிறீர்களா? மிகத் திறமையான நமது துணை முதல்வர் அவர்களை தயவு செய்து இப்படி எல்லாம் நையாண்டி செய்யாதீர்கள். யாரோ லாபம் அடைய செய்யப்படும் இது போன்ற விளையாடல்களுக்கு, ஸ்டாலினை காமெடியன் ஆக்காதீர்கள். ப்ளீஸ்.......

No comments:

Post a Comment