Saturday, April 3, 2010

சானியா. ஒரு விதியின் விளையாட்டு...

சானியா மிர்ஸா. இந்திய டென்னிஸ் உலகின் கனவு தேவதை. அவர் விளையாடியது டென்னிசில் மட்டுமல்ல, நமது பல இளம் காளைகளின் இதயங்களிலும் தான். அந்த அளவிற்கு அவரின் அழகும், பாவனையும் பலரின் தூக்கத்தை கெடுத்திருகிறது. இறைத்து மைதானத்தில் விளையாடிய சானியாவின் வாழ்க்கையில், விதி விளையாடியதை யாராலும் தடுக்க முடியவில்லை. அதுவும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டிருக்கும் இந்த கனவு மங்கைக்கு குடும்ப வாழ்க்கையாவது இனிக்க வேண்டும். அதேநேரம் 120 கோடி இந்திய தேச மக்களின் முகத்தில் கரியை பூசித் தான் இந்த திருமணத்தை ஜோராக நடத்தி காட்டியிருக்கிறார்கள் சானியாவின் குடும்பத்தினர். இனியும் அவர் இந்திய தேச மங்கையாக தன்னை அடையாளம் காட்ட முயற்சிப்பது என்பது சோனியா காந்தி தன்னை ஒரு இத்தாலி பெண்ணாக காட்டுவதற்கு முயற்சிப்பது போலாகும். ஆக இது தேவை இல்லாத முயற்சி தானே? பேசாமல் சானியா மிர்சா இனி பாகிஸ்தான் நாட்டுக்காக ஆடுவதே சாலச் சிறந்தது. காரணம் அங்கு தான் இது வரை ஒரு பெண் டென்னிஸ் வீராங்கனை கூட உலக அரங்கில் வெளிப் படவில்லை. அந்த குறையை சானியா போக்கட்டும். தனது புகழையும் அந்த பாகிஸ்தானுக்கே சீர்வரிசையாக கொண்டு செல்லட்டும். பாலூட்டி வளர்த்த கிளி பறந்தோடி விட்டது. இனி புதியதொரு இந்திய டென்னிஸ் மங்கை விரைவில் நமக்கு வந்து சேருவாள்.
-சின்னப் பையன்

No comments:

Post a Comment